Tuesday, January 19, 2010

இருபத்துமூன்று : ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இறை அநுபூதி.


ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன்னுடைய இறை அனுபூதியை
சீடர்களுக்கு பின் வருமாறு கூறியுள்ளார்.
"பரம்பொருளின் காட்சி கிட்டிய பொழுது
வீடு, கதவு, கோயில் அனைத்துமே மறைந்து விட்டன.
எங்கும் எதுவுமே இல்லாதது போல் தோன்றியது.
எங்கும் எல்லையற்று ஒளி பரவி இருக்க கண்டேன்.
எங்கு நோக்கினாலும் ஒளி வெள்ளம்.
எல்லா திசை களிலிருந்தும் ஒளி,
மிக்க வேகத்துடன் என்னை சூழ்ந்து கொண்டு ,
எல்லையற்ற பரம்பொருளில் ஆழ்த்தியது .
ஒளி வெள்ளத்தில் மூழ்கி திணறி வெளி உணர்வை இழந்து விட்டேன்.
வெளி உலகில் என்ன நிகழ்கிறது என்பதே தெரியவில்லை.
அன்றைய தினமும் , மறு நாளும் எவ்வாறு கழிந்தன என்பது தெரியாது.
ஆனால்,
என் உள்ளத்தில் அளப்பரிய ஆனந்தம் பொங்கி ததும்பியது.

1 comment:

  1. http://vasantruban.blogspot.com/search/label/MEDITATION

    ReplyDelete