Saturday, January 2, 2010

பதிமூன்று : வேடிக்கை 2

உனது வலது கரத்தை தூக்கி அதில் உள்ள பெரு விரலையோ , ஆட்காட்டி விரலையோ, நீட்டவோ, மடக்கவோ, சொடுக்கவோ முடிகிற மாதிரி--

உனது கண்களை மூடவோ,திறக்கவோ,உருட்டவோ, உன்னித்து பார்க்கவோ முடிகிற மாதிரி--

உனது நாவை மடிக்கவோ,புரட்டவோ, ருசி பார்க்கவோ முடிகிற மாதிரி--

உன்னை சுற்றி எவ்வளவோ சப்தங்கள் கேட்டாலும், ஏதோ ஒரு சப்தத்தை மட்டும் பிரித்து உணர்ந்து பார்க்கிற உனது காது மாதிரி--

உன் வீட்டு சாம்பாரில் மணப்பது அதில் உள்ள பச்சை மிளகாயா? கறிவேப்பிலையா? கடுகா? என பிரித்து பார்க்கும்
உனது மூக்கு மாதிரி--

உனது ஆறாவது புலன் ஆன-தூய இருப்பு நிலையை உணரும் -அறிவையும் சுலபமாக உணர முடியும்.

என்ன---
மேற்கண்ட ஐந்து புலன்களையும் அறிந்து அதை பழக்கி வைத்துள்ளோம்.
ஆறாவது புலனை அறியாமல் விட்டு வைத்திருக்கிறோம்.
இனியாவது

ஆறாவது புலனை சிறுக,சிறுக அறிய முயல்வோம்.

No comments:

Post a Comment