Saturday, January 9, 2010

பதினான்கு : எண்ணிலடங்கா மதங்கள்.


உலகில் இன்று நிலவி வரும் பதற்றங்களுக்கும்,
தீவிர வாதத்திற்கும் , இனப்படு கொலைகளுக்கும் ,
பொருளாதார சுரண்டல்களுக்கும் பின்னணியில் , காண கிடைக்காமல் ஒளிந்து கொண்டிருப்பது மத உணர்வுகளே!.

இது வரை மண்ணில் தோன்றி ஞானநிலை நிலை அடைந்த மகான்கள் அனைவருமே கண்டது ஒன்றை தான்.

அதுவே இறுதி நிலை சத்தியம். அதற்க்கு மேலுமோ, அப்பாலுமோ பிரிதொன்று இல்லை. இதை அனைவருமே கூறியுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்க, எண்ணிலடங்கா மதங்கள் தோன்ற காரணம் என்ன?

மூல சத்தியமான -பரபிரம்மம்-தூய இருப்புநிலை-இறைநிலை- இன்னபிற -இதை தவிர மற்ற அனைத்தும் மாயையே. ( மாயை: நிலையற்ற தோன்றி மறையக்கூடியது.) இதுவும் அனைத்து ஞானியரும் கூறியது தான்.

மதங்கள் அனைத்துமே இந்த மாயை எனும் நிழலால்தான் கட்டப்பட்டு இருக்கின்றன. இந்த உண்மை நிலை ஞானமடைந்த ஞாநியர்களுக்கு தெரியாமலா போனது?

ஞாநியர்களுக்கு தெரிந்தே இருந்த்தது என்றால் ஏன் இந்த உண்மையை உலகுக்கு பிரகடனம் செய்யவில்லை?

அவர்களை தடுத்தது எது?

இன்னும் சில மதங்களில் கடவுள் எனும் மாய நிழலால் மதங்களை நிலை நிறுத்தி உள்ளனர்.
..........................மீண்டும் இது பற்றி பேசுவோம்.

No comments:

Post a Comment