Sunday, January 17, 2010

பதினெட்டு : யோனி


தாவர யோனி வழியே வந்து ,
ஊர்வன,
நீந்துவன,
பறப்பன,
ஆகியவற்றின் யோனி வழியே வந்து,
தேவ யோனி வர்க்கங்களான
பூதர்,
இராட்சசர் ,
அசுரர்
முதலியோர் யோனி வழியே கடந்து வந்து
மனித யோனியில்
ஒருவனது சுக்கிலத்துளியின் கண் ஒரு பகுதியில்
பேரணு உருவில்
வெளிப்பட்டு -

எத்தனை யோனிக்குள் புகுந்து,
புகுந்து
வெளிப்பட்டு மனிதப்பிறவி என்பதே கறைப்படுத்தப்பட்ட
பிறவி ஆயிற்றே என்று
வருந்திய ஞான சித்தர் ராமலிங்க அடிகள்
'இறந்திறந்தே இளைத்ததெல்லாம் போதும் இந்த உடம்பு'
என்று கண்ணீர் சொரிய பாடுகின்றார்.

No comments:

Post a Comment