Tuesday, January 19, 2010

இருபத்தியிரண்டு : ஞானம்


புத்தருக்கு
என்றைய தினம் ஞானம் ஏற்ப்பட்டதோ அன்று,
மக்கள் அவரிடம் வந்து 'உங்களுக்கு என்ன கிடைத்தது?' என்று கேட்டனர்.
அவர்;
"அதைகேட்காதீர்கள் நான் எதை இழந்தேன் என்று கேளுங்கள்". என்றார்.
அவர்கள் புத்திக்கு அது எட்டவில்லை.
"எங்களுக்கு விளக்கமாக கூறுங்கள்!" என்றனர்.
புத்தர்: எனக்கு கிடைத்ததே இருந்ததைத்தான் அடைந்தேன்.
எது, என்னிடம் இல்லாதபோதும் இருப்பதாக நம்பிக்கொண்டு இருந்தேனோ ,
அதையே இழந்தேன் .
எது இருக்க வில்லையோ அதை இழந்தேன்:
எது இருந்ததோ ,அதை அடைந்து விட்டேன். என்றார்.

No comments:

Post a Comment