
இந்த உடல் எல்லையுடையது.
உலகில் உள்ள பொருள் யாவும் அது அதற்க்கு ஒரு எல்லையுடன் இருக்கிறது.
சத்து-அசத்து, இருள்-ஒளி, சவம்-உயிர், இந்த ஆறு நிலைகளுடனும்
கலந்து இருப்பது எதுவோ அது எல்லையுடையது.
தூய நிலையான மகாமனத்துக்கு எல்லையே இல்லை.
அந்த மகாமனம் எல்லையற்றது.
நீங்கள் எப்போதாவது எல்லையற்ற ஒன்றை தரிசித்ததுண்டா?
நமது மனமும் எல்லைகளுக்கு உட்பட்டே இது வரை சிந்தித்து வந்துள்ளது.
எல்லைகளுக்கு உட்பட்டு சிந்திப்பதுவே மாயா.
அந்த மனத்தை(அதன் பழக்கம்) எல்லை அற்ற மகாமனத்திடம் சேர்த்தால், - ( ஸ்ரீ ரமண மகரிஷி கருத்தில் சொன்னால், உங்கள் உப்பு கட்டியை (மனம்) அந்த எல்லையற்ற கடலில் (மகாமனம்) கரைத்து விடுங்கள்)-
நீங்கள் வேறு இந்த உலகு வேறு எனும் தற்போதைய,
மாயா எனும் நிலை மாறும்.
No comments:
Post a Comment