Saturday, January 16, 2010

பதினாறு : திகம்பர மகாவீரர்.


மகா சித்தரான ஸ்ரீ வர்த்தமான மகாவீரர் திகம்பர நிலை அடைவதற்கு ஒரு தத்துவார்த்த நிகழ்வே உந்துதலாக இருந்தது.
அன்று மார்கழி மாதத்து கிருஷ்ண பட்ச தசமி திதி.
இந்திரன் கொடுத்த தெய்வீக ஆடை மட்டுமே உடுத்தி தவம் செய்து வந்த
வர்த்தமானரிடம் சோமதத்தன் எனும் பிராமணன் தேடி வந்தான். தானம் வேண்டும் என்று இறைஞ்சினான்.
மகாவீரரிடமோ இடுப்பிலிருந்த இந்திரன் உடையைத்தவிர வேறு இல்லை. ஆயினும் எதுவும் இல்லை என்று கூற விரும்பாது அந்த ஆடையின் ஒரு பகுதியை கிழித்து கொடுத்தார் அவர்.

அதனை பெற்றுக்கொண்டு சென்று சோமதத்தன் ஒரு வியாபாரியிடம் அதற்க்கு பொருள் கேட்டான்.
தேவேந்திர உடையின் மகத்துவம் கண்ட வியாபாரி அந்த உடையின் மறு பாதியையும் கொண்டு வந்து கொடுத்தால் முன்னூறு தங்க காசுதருவதாக கூறினான்.

சோமதத்தன் மகாவீரரிடம் திரும்பி வந்து கேட்ட போது , மகாவீரர் தான் அணிந்திருந்த சிறு உடை மீதான பற்றையும் விட்டு விட்டார்.
அந்த ஆடையையும் கழற்றி கொடுத்து விட்டார். எந்த விதமான உடையுமே தீங்கு தான் பயக்கும் என்று அன்று முதல் திகம்பரரானார் மகாவீரர்.

கையில் திருவோடோ, ஏக தண்டமோ, திரிதண்டாமோ, எதுவும் அவர் வைத்திருக்கவில்லை.

அவர் உடல் முழுவதும் பூச்சிகள் ஊர்ந்தன, பூச்சிகள் அவர் உடலை கடித்தும் துன்புறுத்தின.
அவருடைய நிருவாண தோற்றம் கண்டு ஊராரும் அடித்து துன்புறுத்தினர். எல்லாவற்றையும் அவர் பொறுத்துக்கொண்டார்

நாட்கணக்கில் ,வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பசியும், பட்டினியுமாக இதே நிலை.

கண்ணையோ , உடம்பையோ தொட்டு சொறிந்தால் அதில் ஊரும் ஜீவன்கள் இறந்து விடுமோ என்று அஞ்சி பேசாமல் இருந்து விடுவார்.

சண்ட கௌசிகன் என்ற கொடிய நாகம் ஒரு நாள் வெகு தூரத்திலிருந்தே சீரும் சப்தம் கேட்டது. மகாவீரர் துளியும் அஞ்சாது நின்றார். கொடிய விஷம் பாய்ச்சி அது சினத்தோடு அவருடைய கட்டை விரலைக்கடித்தது.

'தம்பி சண்ட கௌசிகா!' 'உன் விஷம் என்னை ஒன்றும் செய்யாது. நான் சாக மாட்டேன். உன் காரியத்தால் தீவினை தான் பெருகும் .
உன் ஆத்மாவை கவனி . சக ஜீவா ராசிகளிடத்து அன்பு செய்' என்று அவர் கூறியதும் அந்த கொடிய விஷ நாகம், தலை கவிழ்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

No comments:

Post a Comment