Thursday, December 29, 2011

மனிதன் என்பது யார்?

2

மனிதன் என்பது யார்?
மனிதன் என்கிற ( மெட்டீரியல் ) பொருளை நாம் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டியுள்ளது. மனிதன் ஒரு உயிருள்ள பொருள். அவன் ஒரு தனித்த ஓருயிர் கிடையாது. மனிதன் உயிர் செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறான். சுமார் 75 ட்ரில்லியன் செல்கள் சேர்ந்த ஒரு அமைப்பு. அந்த 75 ட்ரில்லியன் செல்களும் 210 வகைகளாக உள்ளன! இவைகளில் மிக நுட்பமானவை நரம்பு செல்கள். உயிர் இந்த பூமியில் தோன்றி 350 கோடி வருடங்கள் ஆகின்றது. அது அன்று தொட்டு பல்கி பெருகிக்கொண்டேயிருக்கிறது. உயிர் என்பது தன்மையால் ஒன்றேயாகும். இந்த பிரபஞ்சத்தின் அலகு அணு என்பது போல! உயிரின் அலகுஉயிர்செல்’லாகும். அது ஒரு செல் உயிரி, பல்வேறு தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதன் என பல்வேறு சரீரங்களை அமைத்துள்ளது. மனிதன் என்கிற சரீர நிலைக்கு வர அது பல்வேறு படிநிலைகளை கடந்து வந்துள்ளது. அந்த தகவல்கள் அவனது D N A வில் இருக்கிறது. 350 கோடி வருட காலமாக உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த உயிர் தன்னை வளர்த்திக்கொள்ள உணவை தன்னிலிருந்தே எடுத்துக்கொள்ளுகிறது. உயிரால் கட்டப்பட்டுள்ள அனைத்து சரீரமும் உயிருக்கு சம்பந்தப்பட்டதையே உணவாக தேர்ந்து கொள்ளுகிறது. உயிர் தொடர்ந்து தன்னை வளர்த்திக்கொள்ள ஒவ்வொரு சரீரங்களுக்கும் தான் எனும் அறிவையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த அறிவைக்கொடுத்து அவைகளை மாயையில் வைத்திருக்கிறது. இது ஒரு செல் உயிரியான பாக்டீரியாவில் தொடங்கியே காண முடியும். ( பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது. இம்மொழியைக் கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய முடிவுகளை எடுக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள், 'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.

ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதற்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதற்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அவற்றை எதிர்ப்பதற்காகவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது. Link: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17092:2011-10-21-08-27-58&catid=24:nature&Itemid=102 )

உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்குமே 'தான்' என்கிற அறிவு உண்டு. இந்த சரீரங்கள் தங்கள் சரீரத்தையே தான் என அபிமானிக்கின்றன. இந்த தான் என்பதன் உச்சமே மனித சரீரம். மனிதன் தன்னை ( சரீரத்தை ) காத்துக்கொள்ளும்பொருட்டே அனைத்து வித காரியங்களையும் செய்கிறான் என்பது வெள்ளிடையாக தெரிகிறது. மனிதனின் இந்த 'தான்'என்ற அறிவே மனமாக செயல்படுகிறது. மற்ற உயிர்களை ( சரீரங்களை ) விட மனிதனுடைய 'தான்' என்கிற அறிவு சற்று விசாலமானது. வித்தியாசமானது. இந்த அறிவுக்கு நினைவக செயல்பாடு உண்டு. பல பதிவுகளை அது கொண்டுள்ளது. இதுவும் ( உயிரின் அல்ல) சரீரத்தின் பரிணாம வளர்ச்சியே!

ஆன்மீகம் - அதன் அறிவியல்.

1

ஆன்மீகம் என்பது இதுவரை கலைத்தன்மையாகவே (art)வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. உவமைகள், உப கதைகள் மூலமும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே உலகில் நிறைய வித்தியாசமான ஆன்மீக தத்துவங்கள் உருவாகிவிட்டன ! அந்த தத்துவங்களை தழுவி ஏகப்பட்ட மத நிறுவனங்களும் உருவாக்கி விட்டது. இந்த, மத தத்துவங்களை சரிவர புரிந்தோ, புரியாமலோ அதன் சடங்குகளை கடைப்பிடித்து அந்த மதத்திற்குரிய கடவுளர்களை வழிபட்டு மற்ற தத்துவங்களை ஏளனப்படுத்தி, மற்ற கடவுளர்களை பழித்து ஒருவித கலவர நிலையாகவே மனித சமூகம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது . உண்மை பலவிதமாக இருக்க முடியாது. உண்மை அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கமுடியும். அனைத்து தத்துவங்களையும் சொன்ன ஞானிகள் ஒரே உண்மையைத்தான் தரிசித்து இருக்க முடியும். ஒவ்வொருவர் ஒவ்வொரு உண்மையை தரிசித்து இருக்க முடியாது. பின் ஏன்? இத்தனை வித்தியாசமான தத்துவங்கள், இத்தனை வித மார்க்கங்கள்? உண்மை என்பதின் பொருள் என்ன ?அதன் லட்சணம் என்ன? எப்போதும் எங்கேயும் ஒரே மாதிரி மாறாமல் இருப்பதே உண்மை, இதுவே உண்மையின் லட்சணம். உண்மை இவ்வாறாக இருக்க தத்துவங்களில் இத்தனை வேறுபாடுகள் ஏன்? எல்லா மகான்களும், எல்லா ஞானியர்களும் கண்ட உண்மை ஒன்றுதான். அந்த உண்மையை எடுத்து சொல்வதில்தான் பிரச்னையே! அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தான் பிரச்னையே! அந்த நிலைபேறான உண்மையோ, மொழிகளை கடந்தது. காட்சிகளை கடந்தது, உணர்வுகளை கடந்தது. அந்த உண்மை அறிவின் முதிர்ச்சி அல்ல!அது அறிவைக் கடந்து நிற்பது . அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை ( அவரவர் சுபாவத்திற்கேற்றவாறு ) கையாண்டுள்ளனர். சிலர் மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டி உவமை, கற்பனைகளையும் கலந்து விட்டனர். சிலர் தங்கள் அனுமானங்களையும் சேர்த்துக்கொண்டனர். அந்த நிலைபேறான உண்மை ஓர் அனுபவ நிலை அல்ல! அது அநுபூதி நிலை. அனுபவம் என்பது ஒருவனது புலன்களால் அறியப்படுவது. அநுபூதி நிலையோ புலன்களை கடந்து, மனதையும் கடந்து, உணர்வையும் கடந்து நிற்பது. அனுபவம் கடந்த ஒன்றை அனுபவ மொழிகளால் சொல்லவரும்போது ஏற்படுகின்ற பிரச்னையே இத்தனை தத்துவ வேறுபாடுகள். மதங்களை, மார்க்கங்களை உபதேசித்தவர்கள் அவரவர் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வளவு அறிவு வளர்ச்சி அடைந்திருந்தனரோ அந்த அளவுக்கே உபதேசிக்க முடிந்தது. ஒரு மதம் 2௦௦௦ ஆண்டுக்கு முன் தோன்றியது என்ற பெருமையோடு,அந்த அளவுக்கு அறியாமையான மக்கள் இடையே, அவர்கள் அறியாமைக்கு ஏற்றஅளவுக்கு அது போதிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு மாறாத உண்மையை அறிவியல் ரீதியாக மட்டுமே நிலை நிறுத்த முடியும். உதாரனத்திற்கு, கணிதம் என்பது அறிவியல் ரீதியானது .இயற்பியல் என்பது அறிவியல் ரீதியானது . வேதியல் என்பது அறிவியல் ரீதியானது இதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. அதுபோல ஆன்மீக இயலும் அறிவியல் பூர்வமாக விவரிக்கப்பட்டால் வெவ்வேறு குழப்பங்கள் நிகழாது அனைவருக்கும் உண்டான ஒரே உண்மையை நிலை நாட்ட முடியும். அதற்கான முயற்சியை நாம் அனைவரும் மேற்கொள்ளவேண்டும்.

புதிய தொடக்கம் .

ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் எழுதப்படுகிறது. ஆன்மிகம் - அதன் அறிவியல் என்ற தலைப்பில்.

Saturday, December 24, 2011

ஆன்மிகம் பற்றிய புத்தகம்


வெளிப்பட்டது எனும் ஆன்மீக அறிவயல் புத்தகம் இங்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் : www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf

Saturday, June 25, 2011

தாவோ- 2

முற்றான வெறுமை என்கிற இலக்கை அடை; பூரண அமைதி என்கிற நிலையிலிருந்து விலகாமல் இரு.

தாவோ.

ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன்: ஆனால், சக்கரத்தின் பயன் அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது.

Saturday, April 30, 2011

தியானத்தில் சுவாசத்தின் பங்கு.

தியானம் செய்யும்பொழுது நமது சுவாசம் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். சாதாரணமாக நாம் இருக்கும்பொழுது நமது சுவாசம் வலது நாசியில் சிறிது நேரமும், பின் இடது நாசியில் சிறிது நேரமுமென நமது உடலின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு சுவாசம் மாறுபட்டு ஓடிக்கொண்டிருக்கும்.

தொடர்ந்து வலது நாசியில் சுவாசித்துக்கொண்டிருந்தால் உடல் உஷ்ணமாக மாறும். தொடர்ந்து இடது நாசியில் சுவாசித்துக்கொண்டிருந்தால் உடல் குளுர்ச்சியாக மாறும்.

நாம் தியானம் செய்யும்பொழுது இரண்டு நாசியிலும் சமமாக சுவாசிக்கும்படி சுவாசத்தை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அந்த சுவாசத்தையும் நீண்ட சுவாசமாக, ஆழமாக உள்ளிழுத்து, நிதானமாக மெதுவாக சீராக வெளி விடுதல் வேண்டும்.

ஒரு பறவையின் சிறகை மூக்கின் அருகில் வைத்தால் வெளிவிடும் மூச்சு காற்றின் வேகத்தால் அசையாது இருக்கவேண்டும் என திரு. ஜக்கி வாசுதேவ் அவர்கள் கூறுகிறார்கள்..

அப்படி கவனமாக சீராக சுவாசத்தை நடத்துதல் வேண்டும். அவ்வளவு சீராக சுவாசத்தை நடத்தும்பொழுது உங்கள் முழுக்கவனமும் சுவாசத்திலேயே இருப்பதை உணர முடியும்.

முழுக்கவனமும் சுவாசத்திலேயே இருப்பது என்றால், உங்கள் உடலிலுள்ள 75 டிரில்லியன் செல்களும் ஒரே கவனத்துடன் செயல்புரிகிறது என பொருள்.
உங்கள் சுவாசமே உங்கள் உடலிலுள்ள செல்கள் சுவாசிக்கத்தான் நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பிராண உடல் என்பது , உடலிலுள்ள 75 ட்ரில்லியன் செல்களும் பிராண தன்மையில் ஒரே சமச்சீராக, சீரான தன்மையில் இருப்பது தான்.

மெதுவாக, மிக மெதுவாக சுவாசம் நடைபெறுகையில் இது சுலபமாக சாத்தியப்படுகிறது.

மன உடலில் தியானம் முடிந்து இணைப்பு உடல் தியானதிற்குள் நுழையும்பொழுது , மன உடலின் எல்லையற்ற பிரகாசிப்புத்தன்மையை அப்படியே ( ஸ்டில் ) நிலை நிறுத்தும்பொழுது, உங்கள் வலது நாசியை சற்று தூக்கி நிறுத்தி,( இது நடராஜ தத்துவம் ) உடலிலுள்ள 75 ட்ரில்லியன் செல்களும் மேல் நோக்கி, புருவ மத்தியை நோக்கி, தங்களது சுவாச நிலைகளை திறந்து வைத்து பிராணன் வேண்டிஏந்தி நிற்க, இப்போது,
இந்த ஸ்தூல உடலில் சுவாசம் நின்றிருப்பதை காண முடியும்.

ஆனால், அனைத்து செல்களுக்கும் பிராண பரிவர்த்தனை தொடரும்.இந்த அதிசய நிகழ்வை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம்.

ஒரு விவசாயி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் முறை என்பது வாய்க்கால், மற்றும் பாத்திகள் அமைத்து தண்ணீரை வாய்க்கால் வழியாக கொண்டு போய் ஒவ்வொரு பாத்தியாக மடை மாற்றி நீர்பாய்சுவான். இது நமது ஸ்தூல உடலின் சுவாச முறை.

தியானதன்மையில் சுவாசத்தை நிலை நிறுத்துதல் (ஸ்டில்) என்பது, தற்கால விவசாய சொட்டுநீர் பாசனம் மாதிரி. சொட்டு நீர் பாசன முறையில் கிணற்று பம்ப் செட்டிலிருந்து மெயின் பைப் வழியாக தண்ணீர் தோட்டத்திற்கு சென்று, அதிலிருந்து பல்வேறு சிறு சிறு பைப்களின் வழியாக ஒவ்வொரு செடியின் அடியிலும் நீர் சொட்டு சொட்டாக விழ, ஒரே சமயத்தில் கிணற்று நீர் தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளுக்கும் தவறாது போய் சேருவதைப்போல- உதாரணம் சொல்லலாம். ஒரு சொட்டும் வீணாவதில்லை. அனைத்து செடிகளுக்கும் ஒரே சீராக, சமச்சீராக நீர் சென்றடைகிறது.

தாவோ

எவன் ஒருவன் பூரண வெறுமையில் இருக்கிறானோ, அவன் பூரண அமைதியில் இருக்கிறான்.

விபத்து.

உங்கள் மனம் தினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறது அதன் வாயிலாக உனகள் மனதில் குப்பைக்கூளங்கள் சேர்ந்து அங்கங்கே அழுக்காகி விடுகிறது. நமக்கு இதை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி ஞானம் இல்லை. இது ஒருபுறமிருக்க சற்று ஒய்வு எடுக்கலாம் என நினைத்து அமைதியாக இருக்க நினைத்தால் , மனம் அந்த அழுக்குகளில் சிக்கி நமைச்சல் ஏற்ப்படுத்துகிறது . உடனே நீங்கள் அதை சொரிய ஆரம்பித்து விடுகிறீர்கள். இது ரோட்டில் நடக்கும் பொழுது இப்படி உங்களுக்கு நடந்தால் எதிரில் வரும் லாரியைக்கூட நீங்கள் கவனிப்பதில்லை.