Friday, January 15, 2010

பதினைந்து : இராமலிங்க அடிகளார்.


அடிகள் ஆவியோடியைந்த யாக்கையுடன் மறைந்த
அந்த புனித நேரம் 1874ஆம் ஆண்டு ஜனவரி30ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியாகும்.
மனித பிறவி எடுத்துவிட்ட எவரும் உடலோடு மறைவது சாத்தியமா?
பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது தானே பெரியோர் வாக்கு.
அடிகளார் உடலோடு மறைந்தார் என்பது உண்மையாக இருக்க முடியுமா என்று பலரும் ஐயுற்றனர்.
உலக நியதிக்கு மாறாக பருவுடலோடு வள்ளலார் மறைந்து விட்டார்
என்ற செய்தியே
வள்ளலார் ஒரு சித்த புருஷர் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.
அவரது முடிவைப்பற்றிய உண்மையை உணர வெறும் அறிவு மட்டுமே போதாது.

"என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று பாடியவர் வள்ளலார்.
வள்ளலார் கூறும்போது சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியை தெரிவிப்பதே அன்றி வேறில்லை.
சாகின்றவன் சன்மார்க்க நிலையை பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி". என்று வலியுறுத்துகிறார்.

1 comment:

  1. http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409 - Tamil
    http://www.vallalyaar.com/?p=975 - English

    ReplyDelete