Thursday, April 29, 2010

இருபத்தியெட்டு : நான் யார்? திரு.ஹரிசந்திரனோடு ஓர் கலந்துரையாடல்.


பதிவு#1
நீங்கள் எழுதியது23 டிசம்பர் 2009 அன்று, 08:14 மணிக்கு

நான் யார்?

பதிவு#2
Hrai Chandran எழுதியது 26 டிசம்பர் 2009 அன்று, 08:55 மணிக்கு
இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் இதுதான் மாறாது இமைபொழுதும் நம்மை விட்டு நீங்காது ,உடல் நான்என்று அது நிற்க்கும் போது உயிர் பிரதிஓன்றாக தோன்றும்,உயிர் நான்என்று நினைக்கும்போது இந்த உலகமே என் உடலாக நிற்கும்.இதை எப்படி அறிவது

இதற்கு முதல் விழக்கம்
அறிவது என்பதன் பொருள்யாது அறியாதஓன்றை பற்றித் தெரிந்துக்கொள்வது.அந்த பொருளை முன்பு அறியாமல் இருந்துஇருக வோண்டும் அல்லது இனி புதிய,நம்மிடம்யில்லாத ஓன்றை அறியும் ஆவலவந்துயிருக்கவோண்டும்,ஆனால் உயிரை பற்றிய விஷயம் அவ்வாறில்லை ஏன் என்றால் நாம் அதை விட்டு பிறிந்த்ததுயில்லை,நாம்இனியும் அதைவிட்டு பிறிய போவது யில்லை,இதுவே பூரணஅறிவு,இதைஅறிய வேரோர் அறிவுகிடையாது ,இப்படியிருக்க நாம்யினி எதைஅறியவோண்டும்,.இது மூன்றாவது கோள்வி.

சூரியன் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கிறது,ஆயினும் நாம் சூரியனைக் காணவிரும்பினால் அதனை நோக்கி நம் கண்களைத் திருப்பிப் பார்க்க வோண்டுமல்வா,அதேப் போல் நான்இருக்கிறேன் என்றதன்மை பொருளின் வடிவில் நம்முள் இயல்பாகயிருக்கும் தன்னிலையே அறிய வோண்டுமானால் நம் கவனத்தை,-நாட்டத்தை,தன்னை நோக்கிதிருப்ப வோண்டும்..

முறையிடு

பதிவு#3
நீங்கள் எழுதியது29 டிசம்பர் 2009 அன்று, 02:05 மணிக்கு
இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் இதுதான் மாறாது இமைபொழுதும் நம்மை விட்டு நீங்காது ,உடல் நான்என்று அது நிற்க்கும் போது உயிர் பிரதிஓன்றாக தோன்றும்,உயிர் நான்என்று நினைக்கும்போது இந்த உலகமே என் உடலாக நிற்கும்.இதை எப்படி அறிவது ?


௧,இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான்.
பதில்; நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் என நம்மால் அப்போது அறிய முடியாது.

௨,உடல் நான்என்று அது நிற்க்கும் போது உயிர் பிரதிஓன்றாக தோன்றும்?
பதில்; இதுவும் அப்போது நம்மால் அறிய முடியாது.

௩,உயிர் நான்என்று நினைக்கும்போது இந்த உலகமே என் உடலாக நிற்கும்.இதை எப்படி அறிவது ?
பதில்; இதுவும் அந்த வயதில் சாத்தியமில்லை.

இது வேறு பதில்; உயிர் நான்என்று நினைக்கும் தெளிவான மனநிலை வாய்க்கும் வயதில், ஐந்து புலன் உணர்வுகளை (தொகுப்பு உணர்வு) தாண்டி ஆறாவது புலன் உணர்வான நமது முதுகு தண்டின் (மூல இருப்பு உணர்வு) உணர்வை அறிந்து அதில் கவனத்தை நிலை நிறுத்தினால், (நிறுத்த முடிந்தால்) உனது தேவைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. ( அப்போது உனக்கு எந்த தேவையும் இருக்காது. எந்த தேடலும் இருக்காது. நீ அக்கணம் பரிபூர்ண நிலையில் இருப்பதால், நீ வேறு இந்த உலகு வேறு எனும் ( பொருள்தன்மை)உன்னிடம் இருக்காது. அனைத்தும் நானே எனும் அருள்தன்மை உனக்குவாய்த்துவிடும்.

கருத்தை அழிக்க

பதிவு#4
நீங்கள் எழுதியது29 டிசம்பர் 2009 அன்று, 02:33 மணிக்கு
இதற்கு முதல் விழக்கம்
அறிவது என்பதன் பொருள்யாது அறியாதஓன்றை பற்றித் தெரிந்துக்கொள்வது.அந்த பொருளை முன்பு அறியாமல் இருந்துஇருக வோண்டும் அல்லது இனி புதிய,நம்மிடம்யில்லாத ஓன்றை அறியும் ஆவலவந்துயிருக்கவோண்டும்,ஆன
ால் உயிரை பற்றிய விஷயம் அவ்வாறில்லை ஏன் என்றால் நாம் அதை விட்டு பிறிந்த்ததுயில்லை,நாம்இனியும் அதைவிட்டு பிறிய போவது யில்லை,இதுவே பூரணஅறிவு,இதைஅறிய வேரோர் அறிவுகிடையாது ,இப்படியிருக்க நாம்யினி எதைஅறியவோண்டும்,.இது மூன்றாவது கோள்வி.?
௧, அறிவது என்பதன் பொருள்யாது அறியாதஓன்றை பற்றித் தெரிந்துக்கொள்வது.

பதில்; அறிவது என்பது -ஒரு மிளகாயை நீங்கள் கடிக்க நேர்ந்தால் அதன் காரத்தை எப்படி அறிகிறீர்களோஅப்படி.


௨, அந்த பொருளை முன்பு அறியாமல் இருந்துஇருக வோண்டும்?

பதில்; மிளகாயை நீங்கள் முன்பே அறிந்து இருந்தாலும், அறியாமல் இருந்தாலும் அதை கடிக்க நேர்ந்தால், இப்போது அதை அறிந்து கொள்வீர்கள்.

௩.அல்லது இனி புதிய,நம்மிடம்யில்லாத ஓன்றை அறியும் ஆவலவந்துயிருக்கவோண்டும்,

பதில்; நம்மிடம் எப்போதுமே அது இருக்கிறது.(அதுவே நமது இயல்பும் கூட) நம்மிடம் அது இல்லை என ஒரு கருத்து மட்டுமே நம்மிடம் இருக்கிறது: ஆவல் என்பது உண்மையின் மீதும், இந்த வாழ்வின் சாந்நித்தியத்தின் மீதும் நமக்கு அக்கறை இருக்குமானால் ,ஆவல் தோன்றும்.
௪,
ஆனால் உயிரை பற்றிய விஷயம் அவ்வாறில்லை ஏன் என்றால் நாம் அதை விட்டு பிறிந்த்ததுயில்லை,நாம்இனியும் அதைவிட்டு பிறிய போவது யில்லை,


பதில்;??????????????????????


௬, இதுவே பூரணஅறிவு,


பதில்;!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இதைஅறிய வேரோர் அறிவுகிடையாது ,இப்படியிருக்க நாம்யினி எதைஅறியவோண்டும்,.இது மூன்றாவது கோள்வி.?

பதில்; நமக்கு தெளிவான மன நிலை வாய்க்க வில்லை எனில் -------இது மூன்றாவது கேள்வி மட்டும் அல்ல, வாழ்க்கையே கேள்விதான்.




கருத்தை அழிக்க

பதிவு#5
நீங்கள் எழுதியது29 டிசம்பர் 2009 அன்று, 02:37 மணிக்கு
சூரியன் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கிறது,ஆயினும் நாம் சூரியனைக் காணவிரும்பினால் அதனை நோக்கி நம் கண்களைத் திருப்பிப் பார்க்க வோண்டுமல்வா,அதேப் போல் நான்இருக்கிறேன் என்றதன்மை பொருளின் வடிவில் நம்முள் இயல்பாகயிருக்கும் தன்னிலையே அறிய வோண்டுமானால் நம் கவனத்தை,-நாட்டத்தை,தன்னை நோக்கிதிருப்ப வோண்டும்?

பதில்; ஆமாம், ஆமாம், ஆமாம்.



கருத்தை அழிக்க

பதிவு#6
Hrai Chandran எழுதியது 30 டிசம்பர் 2009 அன்று, 16:25 மணிக்கு
௧,இந்தஉலகில் தாயின் கருவறை வாசம் முடிந்து உலகியல் வாசம் வரும் போது நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான்.
பதில்; நம்முடன் வருவது நம் உயிர் மட்டும் தான் என நம்மால் அப்போது அறிய முடியாது.

ஐயா,
பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் மாறாதது எது.
எப்போதும் நம்மை விட்டு நீங்காதது எது.
இது தான் என் கேள்வியின் நோக்கம்.
நாம் பிறத்தவுடன் காலம் வந்துவிடும் அதன்வுடன் மனதும் உருவாகிவிடும் இந்த இரண்டும் இருபடிமூலங்கள் இதில் ஒன்றுயில்லாமல் ஒன்றைஅறியமுடியாது வாஸ்தவம் தான்.
மனதால் நாம் அனைத்தையும் காண்கின்றேம் நாம் என்று அபிமானிக்கும் இந்த உடலையும் மனம் உருவானபிறகுதான் அறிகிறோம் சரிதானே.அப்போது அறிவு என்பதும் அறியாமை என்பதும் எதற்கு சொந்தம் மனதிற்கு அல்லவா. இவ்வாறுயிருக்க அந்தமனதைக் கொண்டு நம்மை அறியமுடியுமா.காலம் என்பது மனதிற்கு உயிர் அதுயில்லாமல் அது வாழாது அப்படியிருக்க இப்போது உன்னால் அறியமுடியாது என்பது சரியா,,,,ஏன்அறியமுடியாது விழக்கவும் ஐயா.நன்றி,,

முறையிடு

பதிவு#7
நீங்கள் எழுதியது01 ஜனவரி 2010 அன்று, 10:28 மணிக்கு
பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் மாறாதது எது.?
நமது இருப்பு நிலை.
எப்போதும் நம்மை விட்டு நீங்காதது எது.?
நான் எனும் நமது கருதுகோள். (நமது கருத்து.)

நாம் பிறத்தவுடன் காலம் வந்துவிடும்....................
காலம் என்பது நாம் கருதுகிற மாதிரி நேற்று,இன்று,நாளை என இறந்த காலம், நிகழ காலம், எதிர் காலம் என்று இல்லை.(இப்படி நாம் கருது கிறோம் ) நமது கருத்தில் மட்டுமே இப்படி தோன்றுகிறது. காலம் என்பது, இக்கணம் மட்டுமே!.
அதன்வுடன் மனதும் உருவாகிவிடும்........................
மனம் என்பது செயல்படும் களம் நேற்று,இன்று,நாளை எனும் நமது கருத்து களத்தில் மட்டுமே.
மனதால் நாம் அனைத்தையும் காண்கின்றேம்......................
மனதால் நாம் அனைத்தையும் காண்பதில்லை.(அப்படி கருதுகிறோம்.) பொருளாக(உரு) உள்ளதை மட்டுமே காணமுடியும்.அருவாக (அலை) உள்ளதை அறிய முடிவதில்லை.
நாம் என்று அபிமானிக்கும் இந்த உடலையும் மனம் உருவானபிறகுதான் அறிகிறோம் சரிதானே.?.............
சரிதான்.
அப்போது அறிவு என்பதும் அறியாமை என்பதும் எதற்கு சொந்தம் மனதிற்கு அல்லவா?...............
சரிதான்.
இவ்வாறுயிருக்க அந்தமனதைக் கொண்டு நம்மை அறியமுடியுமா?..................
மனதைக்கொண்டு அனைத்தையும் அறிய முடிவதில்லை.

காலம் என்பது மனதிற்கு உயிர் அதுயில்லாமல் அது வாழாது .....................
காலம் என்பது மனதிற்கு இருப்பு. கருத்தே மனதிற்கு உயிர்.

இப்போது உன்னால் அறியமுடியாது என்பது சரியா,,,,ஏன்அறியமுடியாது ?.............................
மனத்தால் நமது தூய இருப்பு நிலையை முழுமையாக அறிய முடிவதில்லை. காரணம், மனம் என்பது பொருள் (உரு) சார்ந்தே ஊகித்து பழகி வந்துள்ளது. நமது தூய இருப்புநிலையோ அருவானது. அதை ஒரு கணம் நமது மனம் அறிந்தாலும் அதில் நிலைத்து நிற்க முடிவதில்லை.(அந்த ஒரு கண -எண்ணமற்ற நிலை- நிலையை தான் நாம் இன்பம் என்று துய்க்கிறோம். ) ஏனெனில் ஒரு கணத்தில் மட்டுமே உயிர்ப்புதன்மை உள்ளது. (நேற்று,இன்று,நாளை என்பதான கற்பனைகளில் உயிர்ப்பு கிடையாது. ).

கருத்தை அழிக்க

Post deleted on 01 ஜனவரி 2010 at 14:01
பதிவு#9
Hrai Chandran எழுதியது 01 ஜனவரி 2010 அன்று, 16:59 மணிக்கு
//பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் மாறாதது எது.?
நமது இருப்பு நிலை.//
இது நல்லபதில் ஏற்றக்கிட்டேன்.அதில் இருப்பு நிலை பற்றி கொஞ்சம் விழக்கமாகச் சொல்லுங்களே,,,

//நாம் பிறத்தவுடன் காலம் வந்துவிடும்....................
காலம் என்பது நாம் கருதுகிற மாதிரி நேற்று,இன்று,நாளை என இறந்த காலம், நிகழ காலம், எதிர் காலம் என்று இல்லை.(இப்படி நாம் கருது கிறோம் ) நமது கருத்தில் மட்டுமே இப்படி தோன்றுகிறது. காலம் என்பது, இக்கணம் மட்டுமே!.//
இதில் இக்கணம் என்பதின் விழக்கம்
புரியவில்லை ,இதுவும்
காலத்திற்க்கு வுட்பட்டதுதானே,காலாதீதநிலை கிடையாது அல்லவா.

கருத்துகிறோம்,இதில் கருதுவது யார்,

முறையிடு

பதிவு#10
நீங்கள் எழுதியது02 ஜனவரி 2010 அன்று, 01:44 மணிக்கு
காலம் என்பது, இக்கணம் மட்டுமே!.//
இதில் இக்கணம் என்பதின் விழக்கம்
புரியவில்லை ,இதுவும்
காலத்திற்க்கு வுட்பட்டதுதானே,காலாதீதநிலை
கிடையாது அல்லவா..... இது ஹரியின் கேள்வி.
பதில்; இக்கணம் என்பதின் விளக்கம் ; காலம் என்பது இந்த நொடி, இப்போது, இங்கு, இந்த கணம் சற்று முன் இருந்த நொடி இப்போது இல்லை. எப்போதுமே இந்த கணம் மட்டுமே இருக்கிறது. சற்று முன் , பிறகு என்பதெல்லாம் நமது கருத்து. ஒரு நேற்றையாவது,ஒரு நாளையாவது நாம் கண்டிருக்கிறோமா? எப்போதுமே இன்றுகள் தான் வருகின்றன. இக்கணம் என்பது மட்டுமே உயிர்ப்பு.சற்றுமுன், பிறகு என்பது ஓர் கருத்து. இதில் அதீதமாக ஒன்றும் இல்லை.

கருத்துகிறோம்,இதில் கருதுவது யார்,?ஹரியின் கேள்வி

கருதுவது , நான், எனது எனும் நமது கருத்துருவான மனம்தான் கருதுகிறது. மனம் நமது இருப்பு நிலையின் விகசிப்பு. இந்த விகசிப்பு ,பொருள் சார்ந்தும், நமது நினைவு திறன் ஆன ( memory )கற்பனைகளையும் உறவு கொண்டுசெயல்படுகிறது.

கருத்தை அழிக்க

பதிவு#11
நீங்கள் எழுதியது02 ஜனவரி 2010 அன்று, 02:32 மணிக்கு
இருப்பு நிலை பற்றி கொஞ்சம் விழக்கமாகச் சொல்லுங்கலேன். ...ஹரியின் கேள்வி.

உண்மையிலேயே அந்த இருப்பு நிலையே நமக்கு உதவினால் ஒழிய சரியான பதில் வருமாவென தெரியவில்லை. இருப்பினும் முயற்சிப்போம்.

இருப்புநிலை எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் தோன்றின முதல் வெடிப்பும் இந்த இருப்பிலிருந்தே தோன்றி இருக்கிறது. அந்த இருப்பிலிருந்து தான் எல்லாமே விளக்கம் ஆகியுள்ளது. ( கேவலம் நானும் , நீங்களும் கூட) ---இந்த இருப்பு, தான் இருக்கிறேன் என எண்ணியபொழுது இந்த பிரபஞ்சம் தோன்றியது என ஞானம் அடைந்தவர்கள் சொல்கிறார்கள். ( இந்த பொருட்களால் ஆன பிரபஞ்சம் அந்த இருப்பு நிலையின் எண்ணம் என்றும் சொல்கிறார்கள்.) அதன் எண்ணமே பிரபஞ்சம் என்றால் ? அந்த இருப்பின் வியக்தியை யார் அறிவார்? ஆனால் நாமும் அந்த இருப்பிலேயே இருக்கிறோம். இந்த உண்மையை நாம் அறிய முடியாமல் தடுப்பது நமது மனம் சார்ந்த ( நமக்கு வழக்கமான) நான் எனும் தவறான கருதுகோள். இந்த ஐம்புலன் தொகுப்பான மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, ஆறாம் புலனான தண்டுவட உணர்வில் ஆழ்ந்து அதன் மூல உணர்வான இருப்பு நிலையை அறியமுயற்சிப்போம்.

கருத்தை அழிக்க

பதிவு#12
Hrai Chandran எழுதியது 02 ஜனவரி 2010 அன்று, 09:20 மணிக்கு
///ஆறாம் புலனான தண்டுவட உணர்வில் ஆழ்ந்து அதன் மூல உணர்வான இருப்பு நிலையை அறியமுயற்சிப்போம்.///ஐயா பதில்

என் கேள்வி தண்டுவடம் என்பது மனதால் புலன்மூலம் அறியபடும் ஒரு உருப்பு அதில் ஆறாம் அறிவு,அதாவது புலன்கடந்த அறிவை எப்படி உணரமுடியும்,பலனால் புலன்கடந்த உணர்வை எப்படி அறிவது,,,

முறையிடு

பதிவு#13
Hrai Chandran எழுதியது 02 ஜனவரி 2010 அன்று, 09:23 மணிக்கு
ஐயா
மன்னிக்கவும்,
நீங்கள் என் கேள்விக்கு பொருமையாக பதில் எழுதுவது உங்கள் நல் குணத்தை காண்பிக்கிறது.ஆகையால் எதாவது தவறுதலாக கேட்டால் மன்னிக்கவும்,

முறையிடு

பதிவு#14
நீங்கள் எழுதியது04 ஜனவரி 2010 அன்று, 06:01 மணிக்கு
திரு; ஹரிஹரன்: என் கேள்வி தண்டுவடம் என்பது மனதால் புலன்மூலம் அறியபடும் ஒரு உருப்பு அதில் ஆறாம் அறிவு,அதாவது புலன்கடந்த அறிவை எப்படி உணரமுடியும்,பலனால் புலன்கடந்த உணர்வை எப்படி அறிவது,,,

பதில்: ஐயா, தண்டு வடம் என்பது நமது இருப்பு உணர்வின் மைய பிரதேசம் . நமது உயிர்,உடல் உற்பத்தி இந்த மைய பிரதேசத்திலிருந்தே உருவாகிறது. தாயின் கருவில் முதன் முதலில் தோன்றுவது இந்த தண்டுவட பொருளே. நமது ஐந்து புலன் உணர்வையும் நாம் அறிவது இந்த தண்டு வடத்தில் தான். நமது மொத்த உணர்வின் மையமே தண்டு வடம் தான். இந்த அண்ட சராசரத்தின் இருப்பும், நமது இருப்பும் சந்திக்கும் இடமும் இந்த தண்டுவடமே. இந்த தண்டுவட உணர்வின் மய்யத்துக்கு போனால் ,அங்கு பிரபஞ்ச மைய்ய உணர்வும், நமது இருப்பு உணர்வும் சங்கமிக்கும் போது நாம் வேறு, இந்த பிரபஞ்சம் வேறு எனும் பிரித்துணரும் தன்மை போய் அனைத்தும் ஒன்று எனும் --ஆதி சங்கரர் சொன்ன அத்வைத நிலை தோன்றும். அந்த நிலைதான் , அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, என்றும் இருக்கும். மற்றவை அனைத்தும் மாயையே. ஒரு வெப் முகவரி இதை கவனியுங்கள்............http://www.babycenter.com/fetal-development-images-2-weeks

கருத்தை அழிக்க

பதிவு#15
நீங்கள் எழுதியது04 ஜனவரி 2010 அன்று, 06:19 மணிக்கு
மற்றும் ஒரு உயிர் உற்பத்திற்ககான அடிப்படை நிகழ்வான தாம்பத்திய உடலுறவு நிகழ்வின்போதும் அந்த ஆணும், அந்த பெண்ணும் தங்கள் ஐந்து புலன் உணர்வையும் கடந்து அந்த மைய்ய இருப்பு நிலையையே உணர்கின்றனர். ஒரு உயிரின் உற்பத்தி துவக்கமே மைய்ய இருப்பு நிலையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இந்த இருப்பு நிலை உணர்வைத்தான் உலகிலேயே மிக பெரிய இன்பம் என்று கருதுகின்றனர். அந்த இன்பம் ஒரு ஆணுக்கு , ஒரு பெண்ணிடம் இருந்து கிடைப்பதாக எண்ணுகிறான். ஒரு பெண் ஒரு ஆணிடம் இருந்து கிடைப்பதாக எண்ணுகிறாள். அந்த உணர்வு நம்மிடமே உணரப்பட்டது என்பதை கவனிக்க தவறி விடுகின்றனர். அது நமது இருப்பு நிலையே. அதனால்தான் முன்னோர்கள் உடலுறவை சிற்றின்பம் என்றும் , ஞான நிலையாம் அநுபூதி நிலையை பேரின்ப நிலை என சொல்லிஉள்ளனர்.

கருத்தை அழிக்க

பதிவு#16
Hrai Chandran எழுதியது 04 ஜனவரி 2010 அன்று, 09:00 மணிக்கு
///ஐயா, தண்டு வடம் என்பது நமது இருப்பு உணர்வின் மைய பிரதேசம் . நமது உயிர்,உடல் உற்பத்தி இந்த மைய பிரதேசத்திலிருந்தே உருவாகிறது. தாயின் கருவில் முதன் முதலில் தோன்றுவது இந்த தண்டுவட பொருளே. நமது ஐந்து புலன் உணர்வையும் நாம் அறிவது இந்த தண்டு வடத்தில் தான். நமது மொத்த உணர்வின் மையமே தண்டு வடம் தான்.///
நமது இருப்பு உண்ர்வின் மையபிரதேசம்,,,என்று சொல்லும் நீங்கள் நமக்கு ஒரு எல்கை குறிப்பிட்டு இது தான் என்று சொல்வது மாதிரி உள்ளது,,,இல்லாத ஒன்றை ஒரு மையமாக எப்படி குறிப்பிட முடியும்,

மனதால் தானை தண்டுவடத்தை உணர்கின்றோம்,அந்த மனம் கொண்டு நம்மை எப்படி உணரமுடியும்,ஒரு மையம் என்று சொல்லும் போது அது விரிய ஒரு இடம் வோண்டும் அல்லவா,இது இருபடி மூலம் அல்லவா,தன்னிலை ஆகாதன்றோ.தன்னிலை தானே நான் யார் என்பதன் விழக்கம்,

முறையிடு

பதிவு#17
Hrai Chandran எழுதியது 04 ஜனவரி 2010 அன்று, 09:13 மணிக்கு
ஓர் நாய் சுடு காட்டிற்குப் போயிற்று.சதைப்பற்று முழுவதும் எரிந்துபோய் மிஞ்சிக் கிடக்கும் கூரிய எலும்பு ஓன்றை அது கவ்விக்கொண்டு வந்த்து அதை வாயிலிட்டு பற்களால் பலமுறை கடித்துப் பார்த்த்து எலும்பு நாயின் வாயில் குத்தி இரத்தம் வடிய ஆரம்பித்த்து இரத்தம் தோய்ந்த அவ் வெலும்பை நாய் கீழே போட்டுப் பார்த்த்து எலும்பின் மேற்புறம் இரத்தம் காணப்படுவதைக் கொண்டு ஓகோ கடிக்க்க் கடிக்க எலும்பினுள்ளிருந்து இரத்தம் வருகிறது,என்று நினைத்து,அவ்விரத்த்தை நக்கிக் குடித்த்து மறுபடியும் வாயிலிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிக பிரயாசையோடு கடித்த்து தன் வாயில் மேலும் புண்கள் உண்டாகி இரத்தம் எலும்பின் மேற் பெருகிற்று. மிண்டும் நாய் எலும்பை கீழே போட்டு இரத்த்தை குடிப்பதும் மீண்டும் எலும்பை கடிப்பதுமாகவேலை செய்து கொண்டிருந்த்து உன்மையில் இரத்தம் எலும்பிலிருந்து வரவில்லை,தன்வாயினின்றே வருகிறது என்பதை அந்த நாய் உணரவில்லை.

இதுபோலவே,மனிதன் வெளிப் பொருள்களை அனுபவிக்கும் போது தன்னுள்ளுள்ள சுகத்தையே சிறிது பெருகிறான் ஆனால் அறியாமையால், அப் பொருள்களிலிருந்தே சுகம் வருவதாக்க் கருதுகிறான்! கதையிற் கண்ட நாயைப் போல நடந்துகொள்கிறான் அதனால், மீண்டும் மீண்டும் எலும்பையே கடித்த நாயைப் போல மீண்டும் மீண்டும் வெளிப் பொருள்களைத் தேடுவதிலேயே அதற்காக உழைப்பதிலேயே, வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறான்!. அந்தோ! அதன் பயனாக என்ன விளைகிறது ? கணக்கற்ற

துன்பக் குவியலும், பகைவுணர்வுகளுமே மிச்சம்!, இதுவே அறியாமை அல்லது மாயை,!!

உலக சரித்திரம் கூறுகின்ற கற்கால மனிதர்களிலிருந்து தற்கால அணு வாராய்ச்சியாளர்கள் வரை உண்டான மனித சமூகம்.அறிவுத்துறையில் ஆராய்ந்தாராய்ந்து உழைத்த பாடுக ளெல்லாம்,திரும்பத் திரும்ப எலும்பைக் கடித்த நாயின் முயற்சியே யாயிற் றல்லவா ஓளிக்காமல் சொல்லப்பட்டால் உண்மை இதுவே ஏனெனில் வெளிப் பொருள்களாகின்ற பஞ்சேந்திரிய சுக சாதனங்களைத் திரட்டுவதைத் தவிர இன்று உலகிற் காணப்படும் முன்னேற்றம் வெறென்ன நிகழ்திருக்கிறது சொல் உலகின் இத்தனை வித முயற்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தாவது சுகம் வெளிப் பொருள்களிருந்து வருகிறது என்ற தப்புக் கொள்கையே தான் வேறொன்று மில்லை எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்ற எண்ணிய நாய்க்கும் இகத்தின் பாக்கியங்களாகிய வெளிப் பொருள்களைப் பெருக்கிக் குவிக்கும் நவீன பௌதிக விஞ்ஞான ஆராய்ட்சி முன்னேற்றத் தால்தான் உலகம் சுகமடையும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறு சொல் ஓன்றுமேயில்லை யன்றோ.

முறையிடு

பதிவு#18
Hrai Chandran எழுதியது 04 ஜனவரி 2010 அன்று, 09:20 மணிக்கு
ஐயா இது ஒரு கதை அவ்வளவுதான்,,

தன்னிலையோ அறியாமல் முன்னிலை,படற்கையே அறிவது மாயே,அறியாமை,
தன்னிலையே அறிந்து முன்னிலை,படற்கையே அறிவது பூரண அறிவு,இதை விழக்க பிறதி ஒன்று தேவையில்லை,

ஒரு கேள்விமட்டும்,,நம் இருப்பு நிலையே விழக்க எது தேவை,,

முறையிடு

பதிவு#19
நீங்கள் எழுதியது04 ஜனவரி 2010 அன்று, 10:05 மணிக்கு
மனதால் தானை தண்டுவடத்தை உணர்கின்றோம்,அந்த மனம் கொண்டு நம்மை எப்படி உணரமுடியும்,ஒரு மையம் என்று சொல்லும் போது அது விரிய ஒரு இடம் வோண்டும் அல்லவா,இது இருபடி மூலம் அல்லவா,தன்னிலை ஆகாதன்றோ.தன்னிலை தானே நான் யார் என்பதன் விழக்கம்,


pathil: நமது இருப்பு உண்ர்வின் மையபிரதேசம் என்பது , நமது உணர்வின் மைய்ய இடம் என்னும் பொருளில் கூறி இருக்கிறேன்.
அதற்க்கு எல்லை என்று சொன்னால் எல்லையே இல்லாத தன்மையைத்தான் சொல்லமுடியும். இருப்புநிலைக்கு எல்லையே இல்லை. நமது உயிரே அந்த எல்லையற்ற தன்மையைத்தான் விரும்புகிறது. நமது மனதுக்கு வேண்டுமானால் எல்லை இருக்கலாம். மனது அதன் எல்லையை தாண்டினால் , அவனை பைத்தியம் என்று சொல்கிறார்கள். மனதிற்கு ஓர் ஒழுங்கு அமைவு உண்டு. எந்த கட்டுப்பாடும், எல்லைகளும் அற்றது நமது உயிர்ப்பு தன்மை. பரிபூர்ண விகாஸ தன்மையுடையது நமது உயிர்த்தன்மை. அதன் இயல்பே எல்லையற்ற தன்மைதான். அந்த தன்மையை அடையவே தவிக்கிறது.

இல்லாத ஒன்றை ஒரு மையமாக எப்படி குறிப்பிட முடியும்,.............ஹரியின் கேள்வி

மையம் என சொல்லியிருப்பது ஒரு அடையாளத்துக்கு தான். எல்லைகளே இல்லாததுக்கு எது மையம்?
நான் இருக்கிறேன்-- என நினைக்கும் மனதுக்கு சொன்னது அது.

,மனதால் தானை தண்டுவடத்தை உணர்கின்றோம்,அந்த மனம் கொண்டு நம்மை எப்படி உணரமுடியும்: ஹரியின் கேள்வி
தண்டு வடம் என்றால் மனத்தால் அறிகிறோம். ஆனால் தண்டுவட மைய்ய உணர்வு கொண்டு அனைத்தையும் அறிகிறோம்.

ஒரு மையம் என்று சொல்லும் போது அது விரிய ஒரு இடம் வோண்டும் அல்லவா,இது இருபடி மூலம் அல்லவா,தன்னிலை ஆகாதன்றோ.தன்னிலை தானே நான் யார் என்பதன் விழக்கம்,: ஹரியின் கேள்வி

மீண்டும் கூறுவது மையம் என்ற சொல் இந்த உடல்தான் நான் என நினைக்கும் மனித மனத்திற்கு சொல்லப்பட்டது. .................................இங்கிருந்து வரும் பதில் சில சமயம் மனதின் எல்லையிலிருந்து வரலால், சில சமயம் இருப்பின் உணர்விலிருந்தும் வரலாம். உதாரணம்: செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே. சாமி தேன் வந்து காதினில் பாய்ந்தால்
எப்படி இருக்கும்.? இது மொழிகளுக்கு உண்டான பிரச்னை. சொல்லப்பட்ட கருத்தை கவனிப்போம்.

கருத்தை அழிக்க

Post deleted on 04 ஜனவரி 2010 at 13:57
பதிவு#21
நீங்கள் எழுதியது05 ஜனவரி 2010 அன்று, 09:23 மணிக்கு
ஒரு கேள்விமட்டும்,,நம் இருப்பு நிலையே விழக்க எது தேவை,,?

pathil: நமது இருப்பு நிலையை நாம் அறிவதற்கு , உண்மையைப்பற்றி பூர்ண தெளிவு வேண்டும். மயக்கம் இருக்ககூடாது.
சதா காலமும், அந்த உண்மைநிலை விழிப்புடன் இருக்கவேண்டும். உடம்பை நன்கு பழக்கி வைக்க வேண்டும். நாம் பெரும்பாலும் உடல் வேறு, மனம் வேறு என எண்ணி வாழ்கிறோம். உடல் என்பது ஸ்தூலம், மனம் என்பது சூட்சுமம். பொருளாக உடலும், அலையாக மனமும் உள்ளது. மகான் ரஜனீஷ் சொல்கிறார்: உடலுக்கு கொடுக்கும் லாகிரி வஸ்துகள் மனதை ஏன் பாதிக்கிறது? மனதை வசியப்படுத்தினால் உடல் ஏன் மரத்து போகிறது? அல்லது உனது வலது கை வெட்டு பட்டு விட்டது உனக்கு வலது கையே இல்லை என ஒருவன் மனதை வசியப்படுத்தினால், அவனது வலது கையில் நீங்கள் எது செய்தாலும் அதை அவன் உணர்வதில்லை. ஆக நமது உடலை அசையாது வைத்தால் தான் மனது அசையாது நிற்கும். மனது அசையாது நின்றால் நமது இருப்புநிலை விழிக்கும்.இன்னும் மூச்சு பயிற்சிகள் நமது முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் ஞானமடைந்தவர் முன்னிலையில் கற்றுக்கொள்வது மிக்கநலமாகும்.

No comments:

Post a Comment