Friday, January 6, 2012

3

சரீர மாயை.
தரிசனங்கள் என்பவை அடிப்படையில் வேதங்களை விடவும் காலத்தால் முந்தியவை .அதிபுராதன காலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்த மனித மனத்தில் எப்படியோ உருக்கொண்டவை. பிறகு அவை மெல்ல மெல்ல தத்துவங்களாக வளர்ந்தன. உபநிடதங்களும் தரிசனங்களின் அடிப்படைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டன.
1. நியாயம் - கௌதமர்
2. வைசேடிகம் - கணாதர்
3. சாங்கியம் - கபிலர்
4. யோகம் - பதஞ்சலி
5. மீமாம்சை (பூர்வ மீமாம்சை) - ஜைமினி
6. வேதாந்தம் (உத்தர மீமாம்சை) - பாதராயனர்
சாங்கிய தரிசனம் இப்பிரபஞ்சமானது செயலூக்கம் , செயலின்மை ,சமநிலை [ ரஜஸ், தமஸ், சத்வம்] என்ற முக்குணங்களினால் ஆன ஆதிப்பிரகிருதியால் [அல்லது மூலயியற்கை] ஆனதாக இருந்தது என்கிறது .

அக்குணக்கள் அதில் முழுமையான சமநிலையிலிருந்தன. அந்த சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து நாம் காணுமிந்த சலனவடிவ பிரபஞ்சம் உருவாயிற்று. மீண்டும் அந்த செயல்வடிவை அடைவதே அவ்வியற்கையின் நோக்கம் என்கிறது சாங்கியம் . ஆகவே சாங்கியத்தின் அடிப்படைக் கருத்து பொருளிலிருந்தே பொருள் உருவாக முடியும் என்பதாகும். ‘கருத்திலிருந்து’ பொருள் உருவாக முடியாது என அது வாதிட்டது . இதை அவர்கள் சத் காரிய வாதம் என்றார்கள் .
வைசேஷிகமும் பொருள்முதல்வாத தரப்புதான். அது ஆதிப் பொருள் அணுக்களே என்கிறது .அடிப்படைப்பொருட்களான நிலம், நீர்,காற்று, நெருப்பு ஆகியவை அவற்றின் ஆகச்சிறிய துகள்களினாலான அணுக்களினாலானவையாகும். அவற்றின் கூட்டு மூலமே பிற பொருட்கள் உருவாகின்றன. வைசேஷிகத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட துணைத்தரிசனமே நியாயம் ஆகும்.
நியாயம் இவ்வடிப்படைகளை தர்க்கபூர்வமாக எப்படி நிர்ணயிப்பது என்று பேசுகிறது. அதேபோல சாங்கியத்தின் துணைத்தரிசனமே யோகம் . நான்குமே அடிப்படையில் பொருள்முதல்வாதச் சிந்தனைகள். அதாவது அவை உருவகித்துக் காட்டும் பிரபஞ்சத்தில் கடவுளுக்கு ஸ்தானமே இல்லை .
சாங்கியத்தின் பிரபஞ்சக் கொள்கையே யோகத்துக்கும் ஏற்புடையது.ஆகவே யோகம் சாங்கியத்துடன் பிணைக்கப்பட்டு 'சாங்கியயோகம் ' என்றே முன்பு குறிப்பிடப்பட்டு வந்தது .
யோகம் எப்படி உருவாயிற்று என்றறிய நாம் 'புருஷன் ' என்ற கருதுகோளை புரிந்துகொள்ளவேண்டும் . உபநிடதங்களுடன் சாங்கியம் விவாதித்தபோது ஒரு முக்கியமான வினா எழுந்தது . மூன்று குணங்கள் எப்படி ,எவரால் அறியப்படுகின்றன ? அறியப்படாதபோது அவை இல்லை என்றல்லவா பொருள் ?
அதற்குப் பதிலாக சாங்கியர் உருவாக்கிய கொள்கைதான் 'புருஷன் ' என்பது.
பிரகிருதி என்பதை எப்படி உருவகிக்கிறோம் ? பூமியில் உள்ள அத்தனை பொருட்களையும் ஒட்டு மொத்தமாக தொகுத்து ஒற்றைப் பொருளாக கணித்து பிரகிருதி என்கிறோம் .அதேபோல எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன் .
Thanks : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20310029&format=print&edition_id=20031002
1, “முக்குணங்களாலான ஆதி பிரகிருதி ” என்கிறது சாங்கியம் . அந்த முக்குணம் என்பது 1, நியூட்ரான் . 2, புரோட்டான் , 3, எலக்ட்ரான் ஆகும் . நிலைமின், நேர்மின், எதிர்மின் . இதை சாங்கிய யோகம் முக்குணம் என சொல்லுகிறது. இதை அடிப்படையான முக்குணங்கள் என சொல்லுவதும் ஏற்புடையதே!
2, சமநிலை குலைய நேரிட்டமையால் ஆதியியற்கை செயல்பட ஆரம்பித்து என்கிறது . இந்த ஆதியியற்கை என்பது மின்தன்மையேயாகும்.சமநிலையில் இருந்த மின்னலைகள் சலனமுற மூன்றுவித , (மூவகை தன்மையுள்ள ) துகள்களாக உருவாகி அது அணுவாகிறது . அணுக்களின் கூட்டுறவால் தனிமங்கள் தோன்றுகின்றன! அடுத்து மூலக்கூறுகள் இப்படி தோற்றபிரபஞ்சம் உருவாக்கி இருக்கிறது .
3, புருஷன் என்பதைப்பார்ப்போம் . “எல்லா மனிதமனங்களையும் ஒன்றாக சேர்த்து உருவகிக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பே புருஷன்” என்கிறது யோகம் . ஆக இந்த பூமியில் ஒரே ஒரு உயிர்தான் இருக்கிறது . அது நீர்வாழ்வனவாகவும் , நிலம்வாழ்வனவாகவும் , நுண்ணுயிரிகளாகவும்
ஓர் அறிவு -- செடி, மரம். தொடு உணர்வு ---தோல்.
இரண்டு அறிவு --புழு, வண்டு. சுவை உணர்வு ---- நாக்கு.
மூவறிவு -- எறும்பு தேனீ, வாசனை உணர்வு --- மூக்கு.
நாலறிவு.-- நீந்துவன, பறப்பன.ஒளி உணர்வு. --- கண்..
ஐந்தறிவு -- விலங்குகள் யானை மான் ஒலி உணர்வு. --- காது.
ஆறறிவு,--- மனிதன் சிந்திக்கும் ஆற்றல் --- மனம், இப்படி பல்வேறு உயிரிகளாக பரிணமித்து இருக்கிறது . இந்த மூல உயிர் தோன்றி 350 கோடி வருடங்கள் ஆகிறது என்கிறது அறிவியல் . அன்றிலிருந்து பல்கிப்பெருகி இன்றுவரை இவ்வளவு நீட்சி பெற்றிருக்கிறது . அதுஒரே உயிர்தான் , பேருயிர் . யோகத்தின் பாஷையில் புருஷன் .
அப்போ நீங்கள் தனி உயிர் அல்ல ! உயிரின் அலகு செல் ஆகும் . இப்பிரபஞ்சத்தின் அலகு அணு என்பதைப்போல! . சுமார் 75 ட்ரில்லியன் செல்கள் கூடி கட்டியுள்ளது உங்கள் சரீரத்தை . இந்த சரீர சம்பந்தமுள்ள விஷயங்களையே ‘நான்’ என எண்ணுகிறீர்கள் . இப்படி பல லட்சக்கணக்கான விதவிதமான சரீரங்களை தோற்றுவித்து அவைகளுக்கு இந்த தான் எனும் ஆசையை ஊட்டி மாயையில் வைத்துள்ளது அந்த புருஷன் . ,கிட்டத்தட்ட எல்லா மகான்களுமே உங்களுக்கு ஓர் ஆத்மா இருப்பதாகவும் , அதை விழிக்க வையுங்கள் என்றும் சொல்லியுள்ளனர் . அறிவியலாக அந்த ஆத்மா என்பது என்ன ? என்று பார்க்கலாம் . 210 வகையான 75 ட்ரில்லியன் செல்கள் உங்கள் சரீரத்தை கட்டியுள்ளது . ஒவ்வொரு செல்லுமே தனி உயிரி . அவைகள் புறவயமாக இணைவதே இந்த சரீரம் ஆகும் . அவைகள் அகவயமாக இணைவது ஆத்மாவாகும் . ஆத்மா உங்களுக்கு மட்டும் தனித்ததல்ல ! இந்த பூமியின் மீது உள்ள அனைத்து உயிரினங்களுக்குமே அது பொதுவானதாகும்.

Thursday, December 29, 2011

மனிதன் என்பது யார்?

2

மனிதன் என்பது யார்?
மனிதன் என்கிற ( மெட்டீரியல் ) பொருளை நாம் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டியுள்ளது. மனிதன் ஒரு உயிருள்ள பொருள். அவன் ஒரு தனித்த ஓருயிர் கிடையாது. மனிதன் உயிர் செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறான். சுமார் 75 ட்ரில்லியன் செல்கள் சேர்ந்த ஒரு அமைப்பு. அந்த 75 ட்ரில்லியன் செல்களும் 210 வகைகளாக உள்ளன! இவைகளில் மிக நுட்பமானவை நரம்பு செல்கள். உயிர் இந்த பூமியில் தோன்றி 350 கோடி வருடங்கள் ஆகின்றது. அது அன்று தொட்டு பல்கி பெருகிக்கொண்டேயிருக்கிறது. உயிர் என்பது தன்மையால் ஒன்றேயாகும். இந்த பிரபஞ்சத்தின் அலகு அணு என்பது போல! உயிரின் அலகுஉயிர்செல்’லாகும். அது ஒரு செல் உயிரி, பல்வேறு தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதன் என பல்வேறு சரீரங்களை அமைத்துள்ளது. மனிதன் என்கிற சரீர நிலைக்கு வர அது பல்வேறு படிநிலைகளை கடந்து வந்துள்ளது. அந்த தகவல்கள் அவனது D N A வில் இருக்கிறது. 350 கோடி வருட காலமாக உயிர் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த உயிர் தன்னை வளர்த்திக்கொள்ள உணவை தன்னிலிருந்தே எடுத்துக்கொள்ளுகிறது. உயிரால் கட்டப்பட்டுள்ள அனைத்து சரீரமும் உயிருக்கு சம்பந்தப்பட்டதையே உணவாக தேர்ந்து கொள்ளுகிறது. உயிர் தொடர்ந்து தன்னை வளர்த்திக்கொள்ள ஒவ்வொரு சரீரங்களுக்கும் தான் எனும் அறிவையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த அறிவைக்கொடுத்து அவைகளை மாயையில் வைத்திருக்கிறது. இது ஒரு செல் உயிரியான பாக்டீரியாவில் தொடங்கியே காண முடியும். ( பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது. இம்மொழியைக் கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய முடிவுகளை எடுக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள், 'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.

ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதற்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதற்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அவற்றை எதிர்ப்பதற்காகவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது. Link: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17092:2011-10-21-08-27-58&catid=24:nature&Itemid=102 )

உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்குமே 'தான்' என்கிற அறிவு உண்டு. இந்த சரீரங்கள் தங்கள் சரீரத்தையே தான் என அபிமானிக்கின்றன. இந்த தான் என்பதன் உச்சமே மனித சரீரம். மனிதன் தன்னை ( சரீரத்தை ) காத்துக்கொள்ளும்பொருட்டே அனைத்து வித காரியங்களையும் செய்கிறான் என்பது வெள்ளிடையாக தெரிகிறது. மனிதனின் இந்த 'தான்'என்ற அறிவே மனமாக செயல்படுகிறது. மற்ற உயிர்களை ( சரீரங்களை ) விட மனிதனுடைய 'தான்' என்கிற அறிவு சற்று விசாலமானது. வித்தியாசமானது. இந்த அறிவுக்கு நினைவக செயல்பாடு உண்டு. பல பதிவுகளை அது கொண்டுள்ளது. இதுவும் ( உயிரின் அல்ல) சரீரத்தின் பரிணாம வளர்ச்சியே!

ஆன்மீகம் - அதன் அறிவியல்.

1

ஆன்மீகம் என்பது இதுவரை கலைத்தன்மையாகவே (art)வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. உவமைகள், உப கதைகள் மூலமும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே உலகில் நிறைய வித்தியாசமான ஆன்மீக தத்துவங்கள் உருவாகிவிட்டன ! அந்த தத்துவங்களை தழுவி ஏகப்பட்ட மத நிறுவனங்களும் உருவாக்கி விட்டது. இந்த, மத தத்துவங்களை சரிவர புரிந்தோ, புரியாமலோ அதன் சடங்குகளை கடைப்பிடித்து அந்த மதத்திற்குரிய கடவுளர்களை வழிபட்டு மற்ற தத்துவங்களை ஏளனப்படுத்தி, மற்ற கடவுளர்களை பழித்து ஒருவித கலவர நிலையாகவே மனித சமூகம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது . உண்மை பலவிதமாக இருக்க முடியாது. உண்மை அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கமுடியும். அனைத்து தத்துவங்களையும் சொன்ன ஞானிகள் ஒரே உண்மையைத்தான் தரிசித்து இருக்க முடியும். ஒவ்வொருவர் ஒவ்வொரு உண்மையை தரிசித்து இருக்க முடியாது. பின் ஏன்? இத்தனை வித்தியாசமான தத்துவங்கள், இத்தனை வித மார்க்கங்கள்? உண்மை என்பதின் பொருள் என்ன ?அதன் லட்சணம் என்ன? எப்போதும் எங்கேயும் ஒரே மாதிரி மாறாமல் இருப்பதே உண்மை, இதுவே உண்மையின் லட்சணம். உண்மை இவ்வாறாக இருக்க தத்துவங்களில் இத்தனை வேறுபாடுகள் ஏன்? எல்லா மகான்களும், எல்லா ஞானியர்களும் கண்ட உண்மை ஒன்றுதான். அந்த உண்மையை எடுத்து சொல்வதில்தான் பிரச்னையே! அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தான் பிரச்னையே! அந்த நிலைபேறான உண்மையோ, மொழிகளை கடந்தது. காட்சிகளை கடந்தது, உணர்வுகளை கடந்தது. அந்த உண்மை அறிவின் முதிர்ச்சி அல்ல!அது அறிவைக் கடந்து நிற்பது . அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை ( அவரவர் சுபாவத்திற்கேற்றவாறு ) கையாண்டுள்ளனர். சிலர் மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டி உவமை, கற்பனைகளையும் கலந்து விட்டனர். சிலர் தங்கள் அனுமானங்களையும் சேர்த்துக்கொண்டனர். அந்த நிலைபேறான உண்மை ஓர் அனுபவ நிலை அல்ல! அது அநுபூதி நிலை. அனுபவம் என்பது ஒருவனது புலன்களால் அறியப்படுவது. அநுபூதி நிலையோ புலன்களை கடந்து, மனதையும் கடந்து, உணர்வையும் கடந்து நிற்பது. அனுபவம் கடந்த ஒன்றை அனுபவ மொழிகளால் சொல்லவரும்போது ஏற்படுகின்ற பிரச்னையே இத்தனை தத்துவ வேறுபாடுகள். மதங்களை, மார்க்கங்களை உபதேசித்தவர்கள் அவரவர் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் எவ்வளவு அறிவு வளர்ச்சி அடைந்திருந்தனரோ அந்த அளவுக்கே உபதேசிக்க முடிந்தது. ஒரு மதம் 2௦௦௦ ஆண்டுக்கு முன் தோன்றியது என்ற பெருமையோடு,அந்த அளவுக்கு அறியாமையான மக்கள் இடையே, அவர்கள் அறியாமைக்கு ஏற்றஅளவுக்கு அது போதிக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு மாறாத உண்மையை அறிவியல் ரீதியாக மட்டுமே நிலை நிறுத்த முடியும். உதாரனத்திற்கு, கணிதம் என்பது அறிவியல் ரீதியானது .இயற்பியல் என்பது அறிவியல் ரீதியானது . வேதியல் என்பது அறிவியல் ரீதியானது இதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. அதுபோல ஆன்மீக இயலும் அறிவியல் பூர்வமாக விவரிக்கப்பட்டால் வெவ்வேறு குழப்பங்கள் நிகழாது அனைவருக்கும் உண்டான ஒரே உண்மையை நிலை நாட்ட முடியும். அதற்கான முயற்சியை நாம் அனைவரும் மேற்கொள்ளவேண்டும்.

புதிய தொடக்கம் .

ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் எழுதப்படுகிறது. ஆன்மிகம் - அதன் அறிவியல் என்ற தலைப்பில்.

Saturday, December 24, 2011

ஆன்மிகம் பற்றிய புத்தகம்


வெளிப்பட்டது எனும் ஆன்மீக அறிவயல் புத்தகம் இங்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் : www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf

Saturday, June 25, 2011

தாவோ- 2

முற்றான வெறுமை என்கிற இலக்கை அடை; பூரண அமைதி என்கிற நிலையிலிருந்து விலகாமல் இரு.

தாவோ.

ஆரக்கால் முப்பதும் சக்கரத்தின் மையத்தில் இணைகின்றன்: ஆனால், சக்கரத்தின் பயன் அதன் காலிப் பகுதியால் கிடைக்கிறது.